பரந்தாமனிடம் தேவேந்திரன் முறையிடுதல்

பாற்கடலில் லட்சுமி ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருந்தாள்.அருகில் காலடியில் விஷ்ணு அமர்ந்து அவளது இரு கால்களையும் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

முதலில் உள்ளே நுழைந்த தேவேந்திரனுக்கு இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஒரே அதிர்ச்சியாக இருந்தது.

அடச் சே!கொடுமை கொடுமை என்று இவரிடம் முறையிட வந்தால் இதென்ன வங்கொடுமையாக இருக்கிறதே!

அடுத்து நுழைந்த நாரதர் இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் தினந்தோறும் பார்ப்பவராதலால் இந்தக் காட்சியை வித்தியாசமாக
எடுத்துக் கொள்ளவில்லை.

"என்ன தேவேந்திரா.எங்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்.அதுவும் லட்சுமியைக் கொஞ்சம் அதிகமாகவே பார்க்கிறாயே."

அதிர்ச்சியிலிருந்து மீண்ட தேவேந்திரன்,"இதென்ன,வித்தியாசமான காட்சியாக இருக்கிறதே.வழக்கமாக ஆதிசேஷன் மீது நீங்கள் தான் படுத்திருப்பீர்கள்.லட்சுமிதேவி உங்கள் கால்களை அமுக்கிக் கொண்டிருப்பாள்.ஆனால்..."

"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவேந்திரா.நீ சொல்வது வாஸ்தவம் தான்.இன்று காலை பாற்கடலைச் சுத்தம் செய்து மீண்டும் புதுப் பாலை நிரப்பவேண்டிய காமதேனு வரவில்லை.அதனால்.."

என்று சொல்லிக்கொண்டே லட்சுமியைப் பாசத்துடன் பார்த்தார்.

லட்சுமிக்கு வெட்கந்தாங்கவில்லை."போங்கள் சுவாமி.எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது."

"என்ன லட்சுமி.இதுற்குப் போய் இவ்வளவு வெட்கப் படுகிறாய்?"

தேவேந்திரனுக்கு ஒரே கிளுகிளுப்பாக இருந்தது.
"
சீக்கிரம் சொல்லுங்கள் பரந்தாமா.என்னால் பொறுக்க முடியவில்லை.என்னமோ செய்கிறது."

"அட.காமதேனு வராததால் நீயே...."

தேவேந்திரனுக்குக் கிறக்கத்தால் மயக்கமேவந்துவிடும்போலிருந்தது.

பரந்தாமன் தொடர்ந்தார்.

""காமதேனு வராததால் நீயே காமதேனு வீட்டுக்குச் சென்று என்னவென்று கேட்டுக் கையோடு கூட்டிக் கொண்டு வந்துவிடு என்றேன்.அவ்வாறே லட்சுமியும் காமதேனு வீட்டுக்குச் சென்று கூட்டிக் கொண்டு வந்தாள்.இன்று கருடாழ்வார் அவசர வேலையாக விடுப்பு எடுத்துக் கொண்டதால் எனது பழைய தேரை எடுத்துக் கொண்டு லட்சுமி சென்றாள்.வரும் வழியில் தேர் பழுதடைந்துவிட்டது.எனவே காமதேனுவுடன் நடந்தே வந்திருக்கிறாள்.பிறகு காமதேனு பாற்கடலை நிரப்பிவிட்டுப் போனபின் ஒரே ஆயாசமாக இருக்கிறது என்றாள்.அதனால் தான் லட்சுமியைப் படுக்கச் சொல்லி காலிரண்டையும் அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தேன்.

"சரி.நீ வந்த விஷயத்தைச் சொல்.எனக்கு அடுத்தடுத்து நிறைய வேலை இருக்கிறது."

தேவேந்திரனும் விஷயத்தைச் சொன்னான்.

2 comments:

யாத்ரீகன் said...

:-))))))))))))))))))))))))))))))

joooper :-))))))

Subramanian said...

நன்றி யாத்திரீகன்.