கலைஞர் வீட்டில் சாயிபாபா

"சரி.திமுகவில் எப்படிச் சேருவது?"என்று கேட்டான் தேவேந்திரன்.

"நேரே கோபாலபுரம் சென்று கலைஞரைச் சந்திப்போம்.மற்ற ஐடியாவைச் சமயம் போல் ஏற்படுத்திக் கொள்ளலாம். "என்றார் நாரதர்.

இருவரும் கோபாலபுரத்தை அடைந்தனர்.கலைஞரின் வீட்டுக்கு முன்பு பெருங்கூட்டம் கூடி இருந்தது.கூட்டத்தை முண்டி அடித்துக் கொண்டு இருவரும் முன்னேறினர்.வீட்டு வாசலை அடைந்த போது கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த இரண்டு காவலர்கள் வழியை மறித்தனர்.
அருகில் நின்றிருந்த ஒருவரிடம் நாரதர் கேட்டார்


."ஏன் இவ்வளவு கூட்டம்?"

"சாயிபாபா வந்திருக்காருப்பா.தெலுங்கு கங்கைக் கால்வாயெ ரிப்பேர் செய்ய ரூவா தர்றதுக்கு வந்திருக்காருப்பா.உள்ளே போயிகிறாரு.என்னத்தெத் தரப் போராரோ.யாரு கண்டா?"

உள்ளே கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் சாயிபாபாவின் கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தார்.சாயிபாபா தனது இடதுகைவிரல்களின் இடுக்கில் மறைத்து வைத்திருந்த குங்குமக் கட்டிகளில் ஒன்றை வலது கைக்கு மாற்றி அப்படியே வட்டமாக இரண்டு மூன்று முறை சுற்றினார்.குங்குமக் கட்டியை ஆள்காட்டி விரல் கட்டை விரல் ஆகியவற்றின் நுனியில் கொண்டுவந்து பிசைந்து கொண்டே நீட்டினார்.என்ன ஆச்சரியம்?அவர் வலது கையிலிருந்து பொல பொலவென குங்குமம் பிரசாதமாக விழுந்தது.தயாளு அம்மாள் அதைப் பயபக்தியுடன் இரு கைகளிலும் பெற்றுக் கொண்டு கலைஞரிடம் நீட்ட,கலைஞர்,அதை எடுத்துத் தயாளுவின் நெற்றியில் நடு வகிட்டில் பூசினார்.

அருகில் நின்றிருந்த துரைமுருகன் பிரமித்தார்.'இதென்னடா,வெறுங்கையை இப்படி அப்படி ஆட்டிக் கொண்டே குங்குமத்தை வரவழைத்துத் தர்ராரே!நாமும் காலில் விழுந்தா என்ன?நமக்கு என்ன தருவார்?'என்று நினைத்துக் கொண்டே அவரும் காலில் விழுந்து கும்பிட்டார்.எழுந்து கொண்டே இரண்டு கைகளையும் நீட்டினார்.சாயிபாபா துரைமுருகனின் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தவாறே மீண்டும் வலது கையை இப்படி அப்படி என்று சுழற்றினார்.அவர் போட்டிருந்த ஜிப்பாவின் வலதுகைப் பக்கத்திலிருந்து ஒரு மோதிரம் சாயிபாபாவின் உள்ளங்கையில் விழுந்தது.அதை அப்படியே துரைமுருகனிடம் நீட்டினார்.துரைமுருகனும் பயபக்தியுடன் மோதிரத்தைப் பெற்றுக் கொண்டார்.துரைமுருகனுக்குச் சந்தோசந் தாங்கவில்லை.காலில் விழுந்ததிற்கே மோதிரம் உடனடி சப்ளையாக இருக்கிறதே!வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே அருகில் நின்றிருந்த கலைஞரின் மகன் ஸ்டாலினிடம் காட்டினார்.பிறகு ஸ்டாலின் பக்கம் கையைக் காட்டிக் கொண்டே சாயிபாபாவைப் பார்த்து,"தளபதி அண்ணனையும் ஆசீர்வாதம் பண்ணுங்கோ"என்றார்.உடனே ஸ்டாலினும் குனிந்து சாயிபாபாவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டார்.அடுத்த விநாடி அவருக்கும் ஒரு தங்க மோதிரம்!இவ்வளவு கூத்துகளையும் கலைஞர் தன் சோபாவில் அமர்ந்தவாறே பார்த்த்க் கொண்டிருந்தார்.

இப்போது துரைமுருகன் யோசிக்க ஆரம்பித்தார்.இத்துடன் விட்டு விட்டால் சாயிபாபா போனதும் இந்த மோதிரத்தைக் கலைஞர் கேட்டுவிட்டால் என்ன செய்வது?உடனே சாயிபாபாவைப் பார்த்து அப்படியே தலைவருக்கும் ஒரு மோதிரம் கொடுங்களேன்.வேணுன்னா அவர் சார்பாக நான் காலில் விழுகிறேன்"என்றாரே பார்க்கலாம்!ஆனால் சாயிபாபா வேண்டாம் என்பதற்கு அடையாளமாகக் கைகளை ஆட்டியவாறே என்னமோ சொன்னார்.யாருக்கும் புரியவில்லை.அப்போது சாயிபாபாவின் அருகில் நின்றிருந்த ஒரு அல்லக் கை,"கலைஞருக்கு எதற்கு மோதிரம்?அவர் தான் என் இதயத்தில் இருக்கிறாரே என்று பாபா கூறுகிறார்.ஜெய் சாயிராம்!!" என்றார்.கலைஞரும் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.

தேவேந்திரனும் நாரதரும் தங்களின் ஞானக் கண்களால் அந்தக் கண்ராவிக் காட்சிகளைக் கண்டார்கள்.

5 comments:

Anonymous said...

//தேவேந்திரனும் நாரதரும் தங்களின் ஞானக் கண்களால் அந்தக் கண்ராவிக் காட்சிகளைக் கண்டார்கள். //

:-)

யாத்ரீகன் said...

munaadi gilma.. ipo arasiyal.. pakka commertial masala-va irukey unga thodar :-)

அது சரி said...

கதை சூப்பரா சூடு பிடிக்குது. மேல எழுதுங்க அண்ணாச்சி!

Anonymous said...

நாலைஞ்சு நாள் லீவு எடுத்தீரா இல்லையா? அதுக்கு காம்பென்செட் பண்ற மாதிரி ஒரு நாலைஞ்சு போஸ்ட் போடக் கூடாதா...

Subramanian said...

வாங்க யாத்ரீகன்,அதுசரி.நன்றி.
வாங்க விஜய்கோபால்ஸ்வாமி.இன்றைக்கு நான்கு பதிவுகள் போட்டிருக்கிறேன்.