நியமனத்திற்கு முன்பே ராஜினாமாக் கடிதம் பெறப்பட்டது!!!

"சரி.எங்கே தங்கியிருக்கீங்க?"என்று கேட்டார் துரைமுருகன்.

"இனிமெத் தான் பாக்கணும்."இது நாரதர்.

"ஏன் அங்கே இங்கேன்னு இடம் பாத்துகிட்டு?பேசாமெ ஸ்டேட் கஸ்ட் ஹவுசிலெ போய்த் தங்கலாமே.நா ஏற்பாடு பண்ணிட்றேன்."

தேவேந்திரனும் நாரதரும் தலையசைத்து ஒப்புதலைத் தெரிவித்தனர்.

"சரி.நீங்க பாக்கப் போற ரகசிய வேலை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா"

"அதெல்லாம் யார் கிட்டேயும் சொல்லக் கூடாது.சொன்னா அதுக்குப் பேரு ரகசியமில்லே."

"சரி என்னிக்கு வேலையெ ஆரம்பிக்கப் போறீங்க?"

"நாளைக்கே"

"ஓ.அப்படியா!மீண்டும் நாளைக்குச் சந்திப்போமா?"

"இல்லீங்க ,நாளைக்கே நாங்க வந்த வேலையெ ஆரம்பிச்சுடுவோம்.நாங்க கட்சி உறுப்பினர்கள் என்பதையோ பொறுப்பிலெ இருக்கிறவங்க என்பதையோ அனாவசியமா வெளியெ காட்டிக்கமாட்டோம்.தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே சொல்லுவோம்.எங்க நியமனக் கடிதத்தையும் உறுப்பினர் கார்டுகளையும் கொடுத்தனுப்பியிருங்க.பின்னாலெ தேவெபட்டா சந்திப்போம்.நாங்க வரட்டுங்களா?"

கலைஞர் துரைமுருகனைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார்.

துரைமுருகனும் உடனே தலையை ஆட்டிக் கொண்டே எழுந்து கழக லெட்டர் பேடை எடுத்து தேவேந்திரனிடமும் நாரதரிடமும் ஆளுக்கு நாலைந்து தாட்களைக் கிழித்துக் கொடுத்தார்.

"இதுலெ ஒவ்வொண்ணுலேயும் கீழே கையெழுத்துப் போட்டுக் கொடுங்க."
இருவரும் முழித்தார்கள்.

"என்ன இது?"

"உங்க ரெண்டு பேர்களையும் பொறுப்புகள்லெ நியமிக்கிறோம்லியா.ஏதாச்சும் பிரச்சனை வந்தா நீங்க ராஜினமா செஞ்சிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததா உபயோகிச்சுக்குவோம்லெ."

"அதுக்கு ஒரு கையெழுத்துப் போறும்லெ"

"ஒவ்வொண்ணும் ஒவ்வொரு காரியத்துக்குப் பயன்படுங்கிறதுக்குத் தான் மொத்தமா வாங்கி வச்சுக்கிறது.வருத்தம் தெரிவிக்கிறதுக்கு,மன்னிப்புக் கேக்குறதுக்கு,தேவப்பட்டா உங்க பேர்லெ அறிக்கை வெளியிட்றதுக்கு இப்பிடி பலது இருக்கே"

தேவேந்திரன் இதை எதிர்பார்க்கவில்லை.கலைஞர் ஏதாவது சொல்வாரென்று அவர் முகத்தைப் பார்த்தான்.அவரோ காலையிலிருந்து இவ்வளவு நேரம் வரை இன்னும் யாரும் தன் காலில் விழவில்லையே என்ற கடுப்பில் இருந்ததினால் ரொம்பவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.

துரைமுருகன் பேனாவை நீட்டினார்.

நாரதர்"வேண்டாம் வேண்டாம் எங்க பேனாவிலேயே கையெழுத்துப் போடுகிறோம்"என்று தனது சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துத் தேவேந்திரனிடம் நீட்டினார்.தேவேந்திரன் கையொப்பம் போட்டபிறகு தானும் கையொப்பம் போட்டு அவ்வளவு தாட்களையும் துரைமுருகனிடம் நீட்டினார்.அவைகளைப் பெற்றுக் கொண்ட துரைமுருகன் ஒவ்வொரு தாளையும் ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவை கையெழுத்து இருக்கிறதா என்பதைப் பார்த்து உறுதி செய்து கொண்டார். பிறகு இருவரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்.அங்கு நின்றிருந்த தனது அரசியல் பிஏவான அங்கமுத்துவிடம் அறிமுகப் படுத்தினார்.

"அங்கமுத்து.இவங்க ரெண்டு பேர்களுமே தலமெக்கு ரொம்பவும் விசுவாசமான ஆளுங்க.இவங்களெ ஸ்டேட் கஸ்ட் ஹவுசிலெ கூட்டிகிட்டுப் போயி தங்க வச்சிருங்க.அப்பிடியே அறிவாலயம் போயி இவங்க ரெண்டு பேருக்குமே நா சொல்ற மாதிரி நியமனக் கடிதத்தயும் உறுப்பினர் அட்டைகளையுந் தயாரிச்சுகிட்டு மீண்டும் இங்கே வாங்க."

அங்கமுத்து கேட்டார். "கோல்டா சில்வரா?"

"மடையா மடையா.ரெண்டுமே பிளாட்டினண்டா.சீக்கிரம் போ"

உடனே அங்கமுத்துவின் முகம் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்.பிளாட்டினமா!"

"ஆமா.போயி விசயத்தெக் கவனமா முடிச்சிட்டு வா.வேணுன்னா கூட ஒரு ஐஜியையும் அனுப்புறேன்.சீக்கிரம் போ."

"மிகப் பலமான பணிவுடன் அங்கமுத்து இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

0 comments: