திமுகவில் தேவேந்திரனுக்குப் பொறுப்பும்,கலைஞரின் எதிர்பார்ப்பும்

"அதெ அப்புறம் பாத்துக்கலாந்தலைவரே.இவங்களெ நியமிச்சுட்டா அப்புறம் ஏற்கனவே இருக்கிற மாநிலப் பொறுப்பாளரெ என்ன செய்றது?"அதனாலெ பேசாமெ புதுசா ஒரு பிரிவு உருவாக்கணும்.ஏற்கனவே கட்சியிலெ ஒவ்வொரு மாவட்டத்துலேயும் நிறைய பேருங்க பொறுப்புக் கேட்டு வரீசெயிலெ நிக்குறானுங்க.அவங்களுக்கும் கொடுத்தமாதிரி இருக்கும் தலைவரே."

துரைமுருகன் சொன்னதைக் கேட்ட கலைஞரின் முகம் மலர்ந்தது."அப்படின்னா இவங்களெ 'மாநிலங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் பிரிவு'ன்னு ஒண்ணெ ஏற்படுத்தி அதுலெ ஆந்திர மாநிலத்துக்குப் பொறுப்பாளராப் போட்றலாம்."

தேவேந்திரன் இதனை ஆட்சேபித்தான்."அதெல்லாம் வேண்டாம்
தலைவரே.நான் பொறந்தது மட்டுமே ஆந்திரா தவிர அங்கே எனக்கு யாரையுந் தெரியாது.ஸோ..(ஆங்கிலம்!)பேசாமெ என்னெ வெளிநாடுகள் பிரிவு அப்படின்னு ஒரு பிரிவை ஏற்படுத்தி அதிலெ என்னெப் பொறுப்பாளராவும் என் பிஏ நாரதரெ துணைப் பொறுப்பாளராவும் நியமிச்சுருங்க.அதுதான் எல்லாருக்கும் செளகர்யமா இருக்கும்"என்றான் தேவேந்திரன்.

கலைஞர் யோசனையுடன் துரைமுருகனையும் ஸ்டாலினையும் பார்த்தார்.இருவரும் ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு கலைஞர் தேவேந்திரனைப் பார்த்தார்."உங்களைப் பார்த்தால் நல்ல புத்திக் கூர்மையுடையவரென்று தெரிகிறது.சரி.உங்கள் விருப்பப்படியே நியமிக்கிறேன்.மகிழ்ச்சி தானே"என்றார்.

"மிகவும் நன்றி தலைவரே மிகவும் நன்றி."

இப்படிச் சொல்லிவிட்டுத் தேவேந்திரன் தன் கால்களில் சாஷ்டாங்கமாக விழுவானென்று கலைஞர் ரொம்பவும் எதிர்பார்த்தார்.ஆனால் அப்படியெல்லாம் தேவேந்திரன் விழவில்லை.சும்மா நன்றி சொன்னதோடு நிறுத்திக் கொண்டான்.

0 comments: